ராணுவத்திற்கும் அரசியலுக்கும் வெகுதூரம்.. முப்படைத் தளபதி பேட்டி

ராணுவத்தில் அரசியல் தலையீடு இல்லை. நாங்கள் அரசு உத்தரவுப்படி செயல்படுகிறோம் என்று முப்படைத் தளபதி பிபின் ராவத் விளக்கம் தெரிவித்தார்.

தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காக முப்படைத் தளபதி பதவியை புதிதாக மத்திய அரசு உருவாக்கியுள்ளது. முதலாவது முப்படைத் தளபதியாகவும்,பிரதமரின் முக்கிய ஆலோசகராகவும் பிபின் ராவத் நியமிக்கப்பட்டார்.

BipinRanavat on Politcis

முன்னதாக, அவர் ராணுவத் தளபதியாக இருந்த போது, ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், மாணவர்களை போராட்டத்துக்கு வழி நடத்திச் செல்பவர்கள் சரியான தலைமையாக இருக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளும், மாணவர்களும் போராடி வரும் வேளையில் ராணுவத் தளபதி இப்படி கூறியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. ராணுவத் தளபதி அரசியல் பேசலாமா என்று கண்டனம் தெரிவித்தன.


இந்நிலையில், முப்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள பிபின் ராவத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;முப்படைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வைப்பதற்கு முக்கியத்துவம் அளிப்பேன். மூன்று படைகளும் ஒரு குழுவாக செயல்படுவோம். ஒருங்கிணைந்து செயல்படுவது அதிக பலனைத் தரும்.
நாங்கள் அரசியலில் இருந்து வெகுதூரம் ஒதுங்கி இருக்கிறோம். ஆட்சியில் இருப்பவர்கள் சொல்வதற்கு ஏற்ப பணியாற்றி வருகிறோம் இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :