ஜனாதிபதி உரையின் போது நாடாளுமன்றத்தில் சலசலப்பு..

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றும் போது, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசினார். அப்போது அரங்கில் சலசலப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று(ஜன.31) தொடங்கியது. கூட்டத்தின் முதல் நாள் என்பதால், குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற மைய அரங்கில் நடைபெற்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்ேபாது அவர் கூறியதாவது:
அரசியலமைப்பு சட்டத்தின்படி, நாம் மக்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் சட்டங்களை இயற்ற வேண்டும். பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாகிப் புனித தலத்திற்கான பாதையை குறிப்பிட்ட காலத்திற்குள் அரசு உருவாக்கித் தந்துள்ளது.

ராமஜென்மபூமி வழக்கில் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை ஏற்று அனைத்து தரப்பு மக்களும் அமைதியை கடைபிடித்தது மிகவும் பாராட்டக்கூடியது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்தது வரலாற்று சிறப்புமிக்கது. மேலும், ஜம்முகாஷ்மீர் மற்றும் லடாக் பிரதேசம் சமமாக வளர்ச்சியடைவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

போராட்டங்களில் வன்முறை என்பது ஜனநாயகத்தை பாதிக்கிறது. மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரு அவைகளிலும் நிறைவேற்றியிருக்கிறோம்.

இவ்வாறு குடியரசு தலைவர் உரையாற்றும்போது, எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் அதற்கு எதிராக குரல் கொடுத்தனர். இதனால், மைய அரங்கில் சில வினாடிகள் சலசலப்பு காணப்பட்டது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds