குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்

புதுச்சேரி சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்களின் எதிர்ப்பை மீறி, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டது.

புதுச்சேரி சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு பாஜகவைச் சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் இந்த தீர்மானத்தை கொண்டு வரக் கூடாது என்று கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அப்போது அவர்கள், அரசியலமைப்பு சட்டத்தை காலால் மிதிக்கும் நாராயணசாமி அரசை கண்டிக்கிறோம் எழுதப்பட்ட பேனர்களை கையில் ஏந்தியபடி கோஷம் எழுப்பினர். சட்டமன்றத்திற்கு வெளியே அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, இந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வர அனுமதிக்கக் கூடாது என்று அவர்கள் சபாநாயகரிடம் நேற்று கடிதம் கொடுத்திருந்தனர். கவர்னர் கிரண்படேியை சந்தித்தும் இதே போல் ஒரு கடிதம் கொடுத்திருந்தனர்.
கவர்னர் கிரண்பேடி, இந்த கடிதத்தை பெற்று கொண்டு, மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விவாதிக்க புதுச்சேரி சட்டமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டு, முதலமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் அனுப்பினார்.
இந்த கடிதத்தை சட்டமன்றத்தில் வாசித்த முதலமைச்சர் நாராயணசாமி, இந்த கடிதம் இப்போதுதான் எனக்கு வந்துள்ளது. இதை இப்போதுதான் வாசிக்கிறேன். இதில் ரகசியம் என்று போட்டு விட்டு, ஒரு நாள் முன்பே இதை ஊடகங்களுக்கு கவர்னர் அனுப்பியுள்ளார். மேலும், சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கிறார். அரசின் ரகசியத்தை வெளியிட்ட அவர் கவர்னர் பதவி வகிக்க தகுதியற்றவர் என்று கூறினார்.
இந்நிலையில், புதுச்சேரி சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds