கவர்னருடன் கமல்நாத் சந்திப்பு.. வாக்கெடுப்பு நடத்த உத்தரவு..

பாஜகவினர் கடத்திச் சென்ற காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை விடுவித்தால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயார் என்று கவர்னரிடம் முதல்வர் கமல்நாத் கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் 26ம் தேதி அங்கு 3 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு கமல்நாத் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக களம் இறங்கியது. இதனால் அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரசைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக மாறினர். பாஜக ஆளும் மாநிலமான கர்நாடாகாவில் பெங்களூரு ரிசார்ட்டில் அவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களிடம் ராஜினாமா கடிதங்களைப் பெற்று வந்த பாஜக தலைவர்கள் அவற்றைச் சபாநாயகர் பிரஜாபதியிடம் அளித்தனர். இதைச் சபாநாயகர் ஏற்றால், கமல்நாத் அரசு மெஜாரிட்டி இழந்து விடும். ஆனால், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் அமைச்சர்களாக இருந்த 6 பேரின் ராஜினாமாவை மட்டும் ஏற்றார் சபாநாயகர் பிரஜாபதி.

இந்த குழப்பமான சூழலில், இன்று(மார்ச்16) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு கமல்நாத் அரசுக்கு கவர்னர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டார். ஆனால், சபாநாயகர் பிரஜாபதியோ, இன்று சட்டசபையில் கவர்னர் லால்ஜி உரை நிகழ்த்துவார் என்று தெரிவித்து விட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடவில்லை.
இதையடுத்து, முதல்வர் கமல்நாத்தை அழைத்தார் கவர்னர் லால்ஜி டாண்டன். நேற்றிரவு ராஜ்பவனில் கவர்னரை சந்தித்து விட்டு வந்த கமல்நாத் கூறுகையில், பெங்களூருவில் சிறை வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விடுதலை செய்தால் நான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தயார் என்று கவர்னரிடம் கூறினேன். மேலும், சட்டசபையைச் சுமுகமாக நடத்த வேண்டும் என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கவர்னர் கோரினார். இது பற்றி நான் சட்டசபை சபாநாயகரிடம் கூறுவதாகத் தெரிவித்தேன் என்றார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds