எம்.பி.யாவது ஏன்? ரஞ்சன் கோகய் விளக்கம்..

ரபேல் முறைகேடு வழக்கு, அயோத்தி வழக்கு உள்ளிட்டவற்றில் தீர்ப்பு அளித்த முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், ராஜ்யசபா நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் வரவே அவர் அதற்கான காரணத்தைக் கூறினார்.

ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் அனில் அம்பானிக்குச் சாதகமாகப் பிரதமர் மோடி நடந்து கொண்டார் என்றும் இந்த விலை பேரத்தில் பல கோடி ஊழல் நடந்துள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு விசாரித்து, ரபேல் விவகாரத்தில் அரசுக்கு கிளீன் சிட் அளித்தது. அதே போல், அயோத்தி வழக்கில் அரசுக்குச் சாதகமான தீர்ப்பைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வு கூறியது. கடந்த நவம்பரில் ரஞ்சன் கோகய் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், அவரை ராஜ்யசபா நியமன எம்.பி.யாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். அசாமைச் சேர்ந்த கோகய் உடன் கல்வியாளர் மிரினாள் மிரி, மேகாலயாவைச் சேர்ந்த பி.ஆர்.டத்தா, மணிப்பூரைச் சேர்ந்த குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோம் உள்பட 12 பேர் எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டனர்.
ரஞ்சன் கோகய் நியமிக்கப்பட்ட உத்தரவு வெளியான சில மணி நேரத்தில் பல்வேறு தரப்புகளிலிருந்தும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் முன்னாள் நீதிபதிகளும் ரஞ்சன் கோகய்யை கடுமையாக விமர்சித்தனர்.
இதையடுத்து, ரஞ்சன் கோகய் கூறுகையில், நீதித்துறையின் பல்வேறு கருத்துக்களை ராஜ்யசபாவில் எடுத்து வைக்கும் வகையில் நான் இந்த எம்.பி. பதவியை ஏற்றுக் கொண்டேன்என்றார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds