மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்லை..

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இது மேலும் பரவாமல் இருக்க நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் கடும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.க்களின் சம்பளத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. மேலும், எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையான 6 மாதங்களுக்கு தர வேண்டிய அகவிலைப்படி உயர்வு(டி.ஏ.), அடுத்து ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு ஆகியவை தரப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.வழக்கமாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் போதெல்லாம், அதே உயர்வு மாநில அரசு ஊழியர்களுக்கும் தரப்படும். தற்போது மத்திய அரசு இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு இல்லை என்று அறிவித்துள்ளதால், தமிழக அரசும் இதையே பின்பற்றும் எனத் தெரிகிறது. இதனால், தமிழக அரசு ஊழியர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds