புதுச்சேரி முதல்வருக்கு கொரோனா பரிசோதனை

COVID19 test for puducherry CM V Narayansamy, Assembly Speaker VP Sivakolundu.

by எஸ். எம். கணபதி, Apr 23, 2020, 15:58 PM IST

புதுச்சேரியில் முதல்வர், சபாநாயகர் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் இது வரை 21,393 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 681 பேர் பலியாகியுள்ளனர். மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது.


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இது வரை 7 பேருக்குத் தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனினும், இம்மாநிலத்திலும் கடுமையாக ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் இன்று(ஏப்.23) காலையில், முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் மாலையில் தெரிய வரலாம்.

You'r reading புதுச்சேரி முதல்வருக்கு கொரோனா பரிசோதனை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை