இந்தியாவில் கொரோனா சாவு 872 ஆக அதிகரிப்பு.. 28 ஆயிரம் பேருக்கு பாதிப்பு
Indias COVID-19 count reaches 27,892, death toll at 872
இந்தியாவில் இது வரை 27,892 பேருக்கு கொரோனா பாதித்திருப்பதாகவும், இதில் 872 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் பரவியிருக்கிறது. தினம்தோறும் கொரோனாவால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(ஏப்.27) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் 27,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 6185 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 872 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் நேற்று மட்டும் புதிதாக 1396 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதே போல், நேற்று மட்டும் 48 பேர் பலியாகியுள்ளனர்.
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 8068 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 342 பேர் பலியாகியுள்ளனர். குஜராத்தில் 3301 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 151 பேர் பலியாகியுள்ளனர். டெல்லியில் 2916 பேர் கொரோனாவால் பாதித்த நிலையில், 54 பேர் உயிரிழந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 2096 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 103 பேர் பலியாகியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 1868 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதில், 29 பேர் பலியாகி விட்டனர். ராஜஸ்தானில் 2185 பேருக்கு நோய் பாதித்த நிலையில், 33 பேர் பலியாகியுள்ளனர். தமிழ்நாட்டில் 1885 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 24 பேர் பலியாகியுள்ளனர்.
You'r reading இந்தியாவில் கொரோனா சாவு 872 ஆக அதிகரிப்பு.. 28 ஆயிரம் பேருக்கு பாதிப்பு Originally posted on The Subeditor Tamil
More India News