இந்தியாவில் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. பலி 1147 ஆக அதிகரிப்பு

COVID19 positive cases in India rises to 33,050

by எஸ். எம். கணபதி, May 1, 2020, 10:23 AM IST

நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35,043 ஆக அதிகரித்துள்ளது.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் உயிர்க் கொல்லி நோயான கொரேனா வைரஸ், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கானாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(மே1) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் 35,043 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 8,889 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 1147 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் நேற்று மட்டும் புதிதாக 1993 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதே போல், நேற்று மட்டும் கொரோனா பாதித்த 73 பேர் பலியாகியுள்ளனர்.உலகிலேயே அதிக பாதிப்பாக, அமெரிக்காவில்தான் தினமும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். இது வரை அந்நாட்டில் 62 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.

You'r reading இந்தியாவில் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. பலி 1147 ஆக அதிகரிப்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை