விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு.. 8பேர் பலி, 800 பேர் உடல்நிலை பாதிப்பு..

விசாகப்பட்டினம் விஷவாயுக்கசிவு சம்பவத்தில் இது வரை 8 பேர் பலியாகியுள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே ஆர்.ஆர்.வெங்கட்டபுரம் உள்ளது. இங்கு எல்.ஜி.பாலிமர்ஸ் என்ற கெமிக்கல் தொழிற்சாலை இருக்கிறது. இங்கிருந்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென ரசாயன வாயு கசிந்தது. இது சுற்றியுள்ள கிராமங்களில் பரவியதால், மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு கடும் அவதியடைந்தனர்.


மக்களுக்குக் கண் எரிச்சலும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டதால் சாலைகளில் சென்றவர்கள் சுருண்டு விழுந்தனர். காலை 8 மணிக்கெல்லாம் சாலையோரங்களில் பலர் மயங்கிக் கிடந்தனர். உடனடியாக, காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.இதையடுத்து, ஆம்புலன்ஸ் வேன்கள் வரவழைக்கப்பட்டு, மயங்கிக் கிடந்தவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றனர். தற்போது அங்கு காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் மருத்துவத் துறையினர் முகாமிட்டுள்ளனர். இதற்கிடையே, ஆந்திர அரசு அதிகாரிகள் அந்த தொழிற்சாலைக்குள் ஆய்வு செய்து, அதன் இயக்கத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் இது வரை 8 பேர் பலியாகியுள்ளனர். 800க்கும் மேற்பட்டோருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் முதலுதவி சிகிச்சையில் குணமடைந்தனர்.இந்த சம்பவம் குறித்துக் கேள்விப்பட்ட பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனிடம் தொடர்பு கொண்டு விசாரித்தார். அதன்பின், உள்துறை அமைச்சக அதிகாரிகள், பேரிடர் மீட்பு துறை அதிகாரிகளுடன் பேசி, உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்பட பல்வேறு தலைவர்களும் விஷவாயு கசிவு சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த 1984ம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இதே போல் விஷவாயு கசிவு சம்பவம் நடந்தது. அப்போது, யூனியன் கார்பைடு கம்பெனியில் விஷவாயு கசிந்து 3500 பேர் உயிரிழந்தனர். பல லட்சம் பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds