காஷ்மீரில் 4ஜி சேவை.. அதிகாரிகள் குழு ஆராய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஜம்மு காஷ்மீரில் 4ஜி மொபைல் இணையதள சேவை அளிப்பது குறித்து ஆராய உள்துறை அமைச்சகச் செயலாளர் தலைமையில் கமிட்டி அமைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. மேலும், அம்மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.


இதனால், மக்களிடம் எதிர்ப்பு கிளம்பி வன்முறைச் சம்பவங்கள் வெடிக்கலாம் என்ற அச்சத்தில் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்படப் பல கட்சித் தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். மேலும், கடந்த ஆக.5ம் தேதி முதல் இணையதள, மொபைல் மற்றும் தொலைப்பேசி சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன.
காஷ்மிரீல் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அவற்றை விலக்கக் கோரி காஷ்மீர் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கில் பதிலளித்த மத்திய அரசு, அங்கு படிப்படியாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று உறுதி அளித்தது. எனினும், இது வரை அங்கு 2ஜி மொபைல் சேவை மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சுகாதாரச் சேவை, கல்வி மற்றும் வர்த்தகச் சேவைகளுக்கு 4ஜி மொபைல், இன்டர்நெட் சேவை தேவை என்று சுப்ரீம் கோர்ட்டில் வாதாடப்பட்டது. அதே சமயம், 4ஜி சேவை அளித்தால், பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்படும் என்று மத்திய அரசு கூறியது.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட சுப்ரீம் கோர்ட் இன்று ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், காஷ்மீர் மாநிலத்தில் 4ஜி மொபைல், இன்டர்நெட் சேவை அளிப்பது குறித்துப் பரிசீலித்து முடிவெடுப்பதற்கு மத்திய உள்துறை செயலாளர், தகவல் ஒலிபரப்பு துறை செயலாளர் மற்றும் ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர், மனுதாரர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds