உ.பி.யில் லாரிகள் மோதி புலம்பெயர்ந்த தொழிலாளர் 23 பேர் பலி, பலர் படுகாயம்..

உத்தரப்பிரதேசத்தில் 2 லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் 23 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 20 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், பிற மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் இடவசதி இல்லாமல் தவித்தனர். பல நாட்களாகியும் பஸ், ரயில் போக்குவரத்து இல்லாததால், ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு மேல் நடந்தே செல்கின்றனர். சரக்குலாரிகளிலும் மொத்தமாக ஏறிச் செல்கின்றனர். இதில் பலரும் விபத்துக்குள்ளாகி மரணம் அடைகின்றனர்.


ராஜஸ்தானிலிருந்து சரக்கு லாரியில் ஏராளமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த லாரி, உத்தரப்பிரதேச மாநிலம் ஆரையா என்ற இடத்தில் இன்று அதிகாலை 3.30 மணிக்குச் சென்ற போது இன்னொரு சரக்கு லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 23 தொழிலாளர்கள் அதே இடத்தில் பலியாயினர். 20 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்த தொழிலாளர்கள், பீகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இதற்கு முன்பு, மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் அருகே ரயில்வே தண்டவாளத்தில் படுத்து உறங்கிய புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 16 பேர் சரக்கு ரயில் ஏறி, பலியாயினர். அதே போல், மகாராஷ்டிராவிலிருந்து உ.பி.க்கு சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள் 8பேர் மத்தியப் பிரதேசம் குணா அருகே விபத்தில் சிக்கிப் பலியாயினர். முசாபர் நகர் அருகே நடந்த விபத்தில் 6 பேர் பலியாயினர். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பும் போது இப்படிப் பலியாகி வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds