ம.பி. மருத்துவமனையில் கட்டிலோடு கட்டப்பட்ட 80 வயது முதியவர்..

மத்தியப் பிரதேசத்தில் ஒரு மருத்துவமனையில் முதியவர் ஒருவர் சிகிச்சைக்குப் பணம் பாக்கி வைத்ததற்காக அவரை கட்டிலோடு கட்டி வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.மத்தியப் பிரதேச மாநிலம், ஷாஜாபூரில் உள்ள மருத்துவமனைக்கு ராஜ்கார் என்ற ஊரைச் சேர்ந்த 80 வயது முதியவர் லட்சுமி நாராயணா கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். தனக்கு வயிற்று வலி என்று கூறி, மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அவருக்கு ஆரம்பத்தில் மருத்துவமனை செலுத்தக் கூறிய பணத்தை அவரது உறவினர்கள் செலுத்தினர்.


இதன்பின், அவருக்கு நோய் குணமாகி வீட்டுக்குப் புறப்படும் நேரத்தில் அவரிடம் மருத்துவமனை ஊழியர்கள் ஒரு பில்லை கொடுத்தனர். அதில் அவர் ரூ.11,270 செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், முதியவரின் உறவினர்கள் யாரும் அங்கு இல்லை. அவர்கள் முன்பே வீட்டுக்குப் போய் விட்டிருந்தனர்.இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் அந்த முதியவர் தப்பி விடக் கூடாது என்பதற்காக அவரது படுத்திருந்த கட்டிலிலேயே கைகால்களைக் கட்டிப் போட்டனர்.

இந்த காட்சியைச் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். அது வைரலாக பரவியதால், அந்த மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதைத்தொடர்ந்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், ஷாஜாபூர் கலெக்டர் வீரேந்திரசிங் ராவத் கூறுகையில், இது பற்றி மருத்துவமனை தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பின் அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds