பாக். தூதரக அதிகாரிகள் 55 பேரை திருப்பி அனுப்ப முடிவு..

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திலிருந்து 55 அதிகாரிகளைத் திருப்பி அழைத்துக் கொள்ள அந்நாட்டுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த அபித் உசேன், முகமது தாகிர் ஆகியோர் இந்தியாவுக்கு எதிராக உளவு வேலைகளில் ஈடுபட்டனர். இது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்ததும் தங்களை இந்தியர்கள் என்று கூறி, ஆதார் அட்டைகளையும் காட்டினார்கள். ஆனால், அந்த அட்டைகள் போலியானவை என்று தெரிய வந்தது. விசாரணையில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்காக அவர்கள் இந்தியாவில் உளவு பார்த்ததாக ஒப்புக்கொண்டனர். அதன்பிறகு, பாகிஸ்தான் தூதரகம் வேண்டுகோளின் படி இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றி வந்த 2 பேரை அந்நாட்டு போலீசார் கடத்திச் சென்று துன்புறுத்தினர். இந்தியாவின் பலத்த எதிர்ப்புக்குப் பிறகு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், பாகிஸ்தானுடன் தூதரகத் தொடர்புகளைக் குறைத்துக் கொள்ள இந்தியா முடிவு செய்திருக்கிறது. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றுவோரில் 55 பேரை ஒரு வாரத்திற்குள் திருப்பி அழைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.

மேலும், இதே போல் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து 55 பேரைத் திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு அந்நாட்டுக்கு இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் தூதரக அதிகாரி சையத் ஹைதர்ஷாவை அழைத்து, இதைத் தெரிவித்துள்ளனர். இருதரப்பிலும் தூதரக அலுவலகத்தில் பணியாற்றுவோரை 50 சதவீதம் வரை குறைத்துக் கொள்ள உள்ளனர். இதனால், இருநாட்டுத் தூதரகத் தொடர்புகள் குறைக்கப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds