இன்ஸ்பெக்டர் டூ டீச்சர்.. நடைபாதை சிறுவனின் கனவை நனவாக்கும் முயற்சியில் போலீஸ் அதிகாரி!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் பலாசியா சாலையோரத்தில் டிபன் கடை நடத்தி வருபவரின் 12 வயது மகன் ராஜ். பள்ளிக்கூடம் முடிந்த பின்பு தந்தையுடன் சாலையோர டிபன் கடையில் ராஜுக்குப் பணி. வேலைப் பார்க்கும்போது ராஜ் பார்க்கும் காட்சிகள் அவன் மனதில் ஒரு எண்ணத்தை ஏற்படுத்தியது. தங்கள் கடைக்கு அருகே தினமும் போலீஸ் ஒருவர் நின்று வேலைசெய்வதைப் பார்த்து தனக்கும் போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என ஆசை தோன்றுகிறது அந்த சிறுவனுக்கு. மனதில் ஆசை இருந்தாலும் அதைச் சொல்ல முடியாத சூழ்நிலையில் சிறுவனின் குடும்பம் இருக்கிறது. வறுமையில் வாடி வரும் ராஜுவின் குடும்பம் அவனைப் படிக்க வைக்க முடியாத சூழலில் உள்ளனர்.

இருந்தாலும் தன் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறான் சிறுவன் ராஜ். அவன் கனவுக்கு வண்ணம் தீட்டி வருபவர் போலீஸ் ஆபீஸர் வினோத் தீக்‌ஷித். ஆம், எந்தக் கடையின் அருகே நின்று வேலைபார்த்து சிறுவன் மனதில் ஆசை வளர காரணமாக இருந்த அதே காவல் அதிகாரி தான் வினோத் தீக்‌ஷித். சிறுவனின் கனவை அறிந்து தற்போது தினமும் பகலில் தனது போலீஸ் வேலையைப் பார்த்துக்கொண்டே, இரவில் சிறுவனுக்கு ஆசிரியராகவும் மாறி டியூசன் எடுத்து வருகிறார் வினோத்.இது தொடர்பாக பேசியுள்ள வினோத், ``சிறுவனின் அப்பா டிபன் கடை நடத்தி வருகிறார். தாத்தாவும் நடைபாதை வியாபாரிதான். ராஜ் படிக்க ஆசைப்பட்டாலும், அவர்கள் குடும்பத்தில் அவனை டியூஷனுக்கு அனுப்பக் கூட முடியவில்லை.

அதனால் நானே அவனின் கனவை நனவாக்க ஆசைப்பட்டேன். காலை போலீஸ் ஸ்டேஷன் சென்றால் மாலை தான் திரும்புவேன். ஆனால் ட்யூட்டி முடிந்தால் நேராக வீட்டுக்குச் செல்லாமல், சிறுவனின் கடைக்குச் செல்வேன். நடைபாதையில் உட்கார்ந்து அவனுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பேன்.கடந்த ஒரு மாதமாகப் பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறேன். ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களை தற்போது கற்றுக்கொடுக்கிறேன். ராஜ் ஆர்வமாகப் படிக்கிறான். அவனின் ஆர்வத்தையும் விடா முயற்சியையும் பார்க்கும் போது நிச்சயம் ஒருநாள் காவல் அதிகாரியாக வருவான்" எனப் பூரிப்புடன் பேசுகிறார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds