ஐஸ்வர்யாராய், ஆராத்யா கொரோனா குணமாகி வீடு திரும்பினர்..

Aishwarya, Aaradhya test coronavirus negative, discharged from Nanavati hospital

by Chandru, Jul 27, 2020, 18:11 PM IST

நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய், ஆராத்யா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சுமார் ஒருவாரம் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ள ஐஸ்வர்யாராய், ஆராத்யா முன்னதாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தனர்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஐஸ்வர்யா, ஆராத்யா இருவருக்கும் இன்று கொரோனா பரிசோதனை மீண்டும் நடத்தப்பட்டது. அதில் இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

இதையடுத்து இருவரும் இன்று நானாவதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்கள். இந்த தகவலை அபிஷேக் பச்சன் டிவிட்டரில் உறுதிப்படுத்தி உள்ளார். "உங்கள் தொடர்ச்சியான பிரார்த்தனைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. என்றென்றும் கடன்பட்டிருக்கிறேன். ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யா ஆகியோர் கொரோனாவிலிருந்து குணம் அடைந்துள்ளனர். மருத்துவமனையில் இருந்து அவர்கள் டிஸ்சார்ஜ் ஆகி இப்போது வீட்டில் இருக்கிறார்கள். நானும் எனது தந்தையும் மருத்துவ ஊழியர்களின் பராமரிப்பில் மருத்துவமனையில் இருக்கிறோம் எனத் தெரிவித்திருக்கிறார் அபிஷேக்.

இரண்டு தினங்களுக்கு முன் கொரோனா தொற்றிலிருந்து அமிதாப் குணம் அடைந்துவிட்டார் அவர் வீடு திரும்ப உள்ளார் என வதந்தி பரவியது. அதனை அமிதாப் மறுத்ததுடன் இது முற்றிலும் பொய்யான தகவல் என்றார். இதுபற்றி அவர் தெரிவித்தபோது, "இந்த செய்தி தவறானது, பொறுப்பற்றது, போலி யானது மற்றும் ஒரு திருத்த முடியாத பொய்" என்று குறிப்பிட்டிருந்தார்.

You'r reading ஐஸ்வர்யாராய், ஆராத்யா கொரோனா குணமாகி வீடு திரும்பினர்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை