பெங்களூரு கலவரத்தில் ஒரு நெகிழ்ச்சி.. அனுமன் கோவிலை காத்த இஸ்லாமியர்கள்!

இந்தியாவின் சிலிக்கான் வேலி எனப்படும் பெங்களூரு நகரத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தீக்கிரையாக்கப்பட்டது. பெரும் கலவரம் வெடித்து இருவர் தங்கள் உயிரை இழந்தனர். கர்நாடக புலிகேசி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ அகன்ட சீனிவாசமூர்த்தி. இவரது மருமகன் நவீன் என்பவர், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் மத வெறுப்பைத் தூண்டும் வகையில் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து நவீன் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டதாகவும், போலீஸ் புகாரை வாங்க மறுக்கவே, மக்கள் சீனிவாச மூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டனர். ஆர்ப்பாட்டம் கலவரமாக மாற பெங்களூருவில் உள்ள எம்.எல்.ஏ. வீடு அருகே நேற்று முன்தினம் இரவு வன்முறை வெடித்தது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு, அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி, தீ வைத்தனர். எம்.எல்.ஏ. வீட்டின் மீது கற்களை வீசினர். கலவரம் குறித்து தகவலறிந்து ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டனர். வன்முறையாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்திக் கலைக்க முயன்றனர். எனினும், கலவரக்காரர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதால், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், இரண்டு பேர் பலியாகினர். மேலும் வன்முறையில் ஈடுபட்ட 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம் மேலும் பரவாமல் இருக்கப் பெங்களூரு நகரம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் பதிவு போட்ட எம்எல்ஏவின் மருமகன் நவீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வளவு பெரிய கலவரத்துக்கும் நடுவில் பெங்களூருவில் நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கலவரப் பகுதியிலிருந்த ஒரு இந்து கோவிலை ஒரு சிலர் தாக்க முற்பட இஸ்லாமிய இளைஞர்கள் மனிதச் சங்கிலி அமைத்து அரணாக நிற்கக் கோவிலில் சேதம் ஏற்படுவது தடுக்கப்பட்டது. இந்த நெகிழ்ச்சி சம்பவத்துக்குக் காரணமான முகமது காலித் என்ற இளைஞர் கூறுகையில், `நான் இரவில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியபோது, 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இங்கிருக்கும் அனுமன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தனர். சில நொடிகளில் ஆட்டோவில் இருந்து வந்திறங்கிய மேலும் சிலர் கல் மூட்டையை இறக்கி வைத்தனர்.

அவர்களின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியதால், உடனே என் நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்து அனுமன் கோவிலுக்கு வரவழைத்தேன். பின்பு, அனைவரும் மனிதச் சங்கிலி அமைத்து நள்ளிரவு 11 மணியில் இருந்து 2 மணி வரை கோவிலின் பாதுகாப்புக்கு நின்றோம்" எனக் கூறியுள்ளார். இஸ்லாமிய இளைஞர்கள் அனுமன் கோவிலுக்குப் பாதுகாப்புக்காக நின்ற புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :