கேரள அரசு மீது நாளை நம்பிக்கை இல்லா தீர்மானம்

திருவனந்தபுரம் அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தங்கக் கடத்தலில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுக்கு கேரள முதல்வர், முக்கிய அரசு அதிகாரிகள் உட்படப் பல முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு இருப்பதாக இந்த வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ தெரிவித்தது. இதற்கிடையே ஸ்வப்னா சுரேஷுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் தங்க கடத்தலில் முதல்வர் அலுவலகத்திற்கும் தொடர்பு உள்ளதால் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கைவருக்கும் இந்த கும்பலுடன் தொடர்பு உள்ளது என்றும், எனவே சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி விடுத்துள்ளன. இதற்கிடையே ஸ்வப்னா சுரேஷ் திருவனந்தபுரத்தில் தொடங்கிய ஒரு கார் ஒர்க் ஷாப் திறப்பு விழாவில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். எனவே அறிக்கை விடுத்தன.

இந்நிலையில் நாளை கேரள சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. இதையடுத்து நாளைய கூட்டத்தில் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர எதிர் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இதுதொடர்பாக சட்டசபை செயலாளரிடம் காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நாளைய கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டாலும் இடதுசாரி கூட்டணிக்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் இருப்பதால் இந்த தீர்மானம் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :