கடலில் அலைகள் ஓயாது.. காங்கிரசில் சலசலப்பு ஓயாது.. ப.சிதம்பரம் பேட்டி

கடல் என்றால் அலைகள் சத்தம் போடத்தான் செய்யும். அப்படித்தான் உயிரோட்டமுள்ள காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு வரத்தான் செய்யும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில்சிபல், குலாம் நபி ஆசாத், சசிதரூர், மணீஷ்திவாரி உள்பட 23 பேர் சேர்ந்து, சமீபத்தில் கட்சித் தலைமைக்கு ஒரு கடிதம் அனுப்பினர். அதில், இடைக்காலத் தலைவர் சோனியா பதவி விலகி, நிரந்தர தலைவரைத் தேர்வு செய்ய வேண்டுமெனக் கோரியிருந்தனர். இந்த சூழலில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம், நேற்று (ஆக.24) காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. அதில் தாம் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், உடனடியாக புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான பணிகளைத் தொடங்குமாறும் சோனியா கூறினார். ஆனால், மன்மோகன்சிங், ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் சோனியாவே தலைவராக நீடிக்க வேண்டுமென்றனர்.

அப்போது, குலாம் நபி ஆசாத், கபில்சிபல் ஆகியோரை ராகுல்காந்தி விமர்சித்ததாகவும், பாஜகவுடன் அவர்கள் ரகசியமாக உடன்பாடு வைத்துக் கொண்டு காங்கிரசை பலவீனப்படுத்துகிறார்களா? என்று கேள்வி எழுப்பியதாகவும் செய்தி வெளியானது.
கூட்டத்தில் பங்கேற்காத கபில்சிபல், இந்த செய்தியைப் படித்ததும் கோபமடைந்தார். உடனே தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த 30 ஆண்டுகளில் பாஜகவை ஆதரித்து நான் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை என்று காரசாரமாகப் பதிவு வெளியிட்டார். உடனே, அவரை ராகுல்காந்தி தொடர்பு கொண்டு தாம் அப்படிப் பேசவே இல்லை என்றும் மீடியாவின் தவறான செய்திக்கு ஆட்படுகிறீர்கள் என்றும் விளக்கம் தெரிவித்தார். இதையடுத்து, கபில் சிபல் தனது ட்விட்டை நீக்கினார். தன்னிடம் ராகுல்காந்தியே விளக்கம் கொடுத்ததையும் குறிப்பிட்டார். அதன்பின், சோனியாவே இடைக்கால தலைவராக 6 மாதங்கள் நீடிப்பது எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், தொலைக்காட்சி சேனல்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:தலைமைக்குக் கடிதம் எழுதியவர்கள் அனைவருமே என்னை விட, ராகுல்காந்தியை விட மிகக் கடுமையாக பாஜகவை விமர்சித்தவர்கள் என்பதை மறுக்க முடியாது. காங்கிரஸ் கட்சி உயிரோட்டமான கட்சி என்பதால், கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும். எதிர்க்கருத்துகள் வந்தால்தான், இன்னும் வேகமாகச் செயல்படுவதற்கு உதவும். கட்சியில் எல்லாமே சரியாக இருப்பதாக நான் சொல்லவில்லை. கடலில் என்றாவது அலைகள் ஓய்ந்துள்ளதா? அலைகள் அமைதியாகிப் பார்த்திருக்கிறீர்களா? அப்படி அலைகள் ஓய்ந்து விட்டால், அது இறந்தக் கடல் (Dead sea) ஆகி விடும். கட்சியில் சில கேள்விகள் எழத்தான் செய்யும். அப்படி எழும் போது அதற்கான தீர்வுகளை நாம் காண்கிறோம். காங்கிரஸ் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds