கொச்சியில் 14 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் 3 உ பி வாலிபர்கள் கைது

Kochi minor rape case, 3 arrested

by Nishanth, Aug 25, 2020, 11:02 AM IST

கொச்சி அருகே உள்ள மஞ்சும்மல் என்ற பகுதியில் ஒரு வெளிமாநில தொழிலாளியின் குடும்பம் வசித்து வருகிறது. இந்த தொழிலாளிக்கு 8வது வகுப்பு படிக்கும் 14 வயது மகள் உள்ளார். இவர்களது வீட்டுக்கு அருகே உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் தொழிலாளி தனது மனைவியுடன் வெளியே சென்றிருந்தார் . வீட்டில் அந்த சிறுமி மட்டுமே இருந்தார்.

இதைத் தெரிந்து கொண்ட பக்கத்து வீட்டில் வசிக்கும் தொழிலாளர்களில் 2 பேர், சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து அவரை மிரட்டி பலாத்காரம் செய்தனர். வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளனர். இதனால் பயந்த அந்த சிறுமி, யாரிடமும் நடந்த சம்பவம் குறித்துக் கூறவில்லை. இதன் பின்னர் சில நாட்கள் கழித்து அந்த சிறுமியை மிரட்டி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று 6 பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்தனர். கடந்த 5 மாதங்களில் 10 முறை இக்கும்பல் கொச்சியில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்த விவரம் அந்த சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கொச்சி ஏலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து ஷாகித் (29), பர்ஹாத் கான் (28), ஹனிபா (26) ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். இவர்களுடன் சேர்ந்து சிறுமியைப் பலாத்காரம் செய்த மற்ற 3 தொழிலாளர்கள் உத்தரப்பிரதேசத்திற்குத் தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து அவர்களைக் கைது செய்யக் கொச்சி போலீசார் உத்தரப்பிரதேசத்திற்கு விரைந்துள்ளனர். 14 வயது சிறுமி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading கொச்சியில் 14 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் 3 உ பி வாலிபர்கள் கைது Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை