அபுதாபியில் அச்சமூட்டும் கொரோனா.. ஐபிஎல் சந்திக்க இருக்கும் அடுத்த சிக்கல்!

Frightening corona in Abu Dhabi .. The next problem to face in the IPL!

by Sasitharan, Aug 26, 2020, 15:21 PM IST

ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் 19ம் தேதி முதல் நவம்பர் மாதம் 10ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் துபாய் சென்று விட்டனர். எனினும் போட்டி அட்டவணைகள் குறித்து இதுவரை எதுவும் அறிவிப்பு வெளியாகவில்லை. அட்டவணை வெளியாவதில் சிக்கல் இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் தற்போது கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளதே இந்த சிக்கலுக்குக் காரணம்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே அபுதாபியில் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. இது அச்சத்தை ஏற்படுத்துவதால் தொடர் நடப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது எனக் கூறப்படுகிறது. எனினும், தொற்றைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அபுதாபிக்கு நுழையும் அனைத்து பாதைகளிலும் தொற்றைக் கண்டுபிடிப்பதற்கான சோதனைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.

இதனால் பிசிசிஐ மாற்று வழிகளை யோசிக்கத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அபுதாபியைத் தவிர்த்து மற்ற மைதானங்களில் போட்டிகளை நடத்தலாமா? அல்லது போட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாமா என்ற ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகிறது.

You'r reading அபுதாபியில் அச்சமூட்டும் கொரோனா.. ஐபிஎல் சந்திக்க இருக்கும் அடுத்த சிக்கல்! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை