ஆன்லைன் வகுப்புகளில் ஊடுருவி ஆபாச வீடியோக்கள் வெளியீடு மாணவர்கள் அதிர்ச்சி

கொரோனா ஊரடங்கு சட்டத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஒன்றும் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் தேர்வு எழுதாமலேயே மாணவர்கள் பாஸ் ஆகி அடுத்த வகுப்புகளுக்குச் சென்று விட்டனர். இந்நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கேரளாவில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளில் மாணவர்களிடையே வாட்ஸ்அப் குரூப்புகளை ஏற்படுத்தி பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. யூடியூப் மூலமும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கேரளாவில் சில பள்ளிகளில் மாணவர்களின் வாட்ஸ்அப் குரூப்புகளில் ஊடுருவி ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை பகிர்ந்தது மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலப்புரம் மாவட்டம் குற்றிப்புரம் என்ற இடத்தில் ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளி உள்ளது.இந்த பள்ளியில் கடந்த வாரம் 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சூம் செயலி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அப்போது திடீரென ஒருவர் அதில் ஊடுருவி ஆபாச வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை வெளியிட்டார்.

இதைப் பார்த்த மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அந்த பள்ளி முதல்வர் குற்றிப்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அந்த நபர் பள்ளியின் சூம் பாஸ்வேர்டை திருடி அதில் ஊடுருவியது விசாரணையில் தெரியவந்தது.மேலும் சில பள்ளிகளிலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :