கர்நாடகாவில் முழு தளர்வு.. மதுபான பார்கள் திறப்பு.. கொரோனா சோதனை இல்லை..

கர்நாடகாவில் பப் என்றழைக்கப்படும் மதுபான பார்கள் திறப்பதற்கும், ஓட்டல்களில் மதுபானங்கள் சப்ளை செய்வதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போல், பஸ், ரயில்களில் வருவோருக்குப் பரிசோதனையும் தேவையில்லை. தனிமைப்படுத்தவும் தேவையில்லை.கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதியன்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்பின், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்வு செய்யப்பட்டன. இது வரை 4 கட்டங்களாகத் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதனடிப்படையில், மாநில அரசுகளும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன. கடைசியாக, கடந்த 1ம் தேதி தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் கர்நாடக அரசு கிட்டத்தட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கி முழு தளர்வுகளை அறிவித்து விட்டது. பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாவிட்டாலும், 9ம் வகுப்புக்கு மேல் மாணவர்களை அழைத்துச் சிறப்பு வகுப்புகளை நடத்த அனுமதித்துள்ளது.அதே போல், பீர் பப் உள்பட மதுபான பார்கள் அனைத்தையும் திறப்பதற்கு அனுமதித்துள்ளது. அந்த பார்களில் அவர்களாகவே சமூக இடைவெளி விட்டு, கொரேனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால் போதும். அரசு அதிகாரிகள் சிறப்புப் படை சோதனை என்று எதுவும் கிடையாது.அந்த மாநில கலால் துறை அமைச்சர் ஹெச்.நாகேஷ் கூறுகையில், கடந்த 5 மாதங்களில் மதுபான பார்கள் மூடப்பட்டதால் அரசுக்கு ரூ.1435 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இனிமேலும் பார்களை மூடி வைத்தால், இந்த இழப்பு 3 ஆயிரம் கோடியைத் தாண்டும். எனவே, பொருளாதார நிலைகளைக் கருத்தில் கொண்டு அரசு அனைத்து துறைகளிலும் தளர்வுகளை அறிவித்திருக்கிறதுஎன்றார்.

மேலும், அரசு மற்றும் தனியார் பஸ்களில் வழக்கம் போல் பயணிகளை அனுமதிக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. பஸ், ரயில் நிலையங்களில் ஸ்கிரீனிங் என்ற பெயரில் பரிசோதனைகள் எதுவும் செய்யப்படாது. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களாக இருந்தாலும் யாரும் 14 நாள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. வெளியூர்களுக்குச் செல்பவர்களும் முன்பு போல் அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டியதில்லை. மருத்துவப் பரிசோதனைகளும் செய்யத் தேவையில்லை. அதே போல், வீடுகளில் தனிமைப்படுத்துதல், தகரம் அடித்தல் போன்ற எல்லாமே விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :