Advertisement

கேரளாவில் இரவு நேரங்களில் பெண்களை தனியாக ஆம்புலன்சில் கொண்டு செல்ல தடை

கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே நேற்று முன்தினம் இரவில் கொரோனா பாதித்த இளம்பெண்ணை மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லும்போது அதன் டிரைவரே பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைக் கண்டித்து கேரளாவில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொடூர சம்பவத்திற்குப் பொறுப்பேற்று சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. கேரளாவில் பல பகுதிகளில் அமைச்சர் சைலஜாவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

இந்த சம்பவம் கேரளாவுக்கு பெரும் அவமானம் என்று பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் கூறினார். கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு கிரிமினலை ஆம்புலன்ஸ் டிரைவராக எப்படி நியமிக்கலாம் என்று கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா கேள்வி எழுப்பினார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து இன்று சுகாதாரத் துறை அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், இரவு நேரங்களில் ஆம்புலன்சில் பெண்களைத் தனியாக அழைத்துச் செல்லக் கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணிக்குப் பின்னர் அவசர சிகிச்சை தேவைப்பட்டால் மட்டுமே பெண்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும், அப்போது சுகாதாரத் துறை ஊழியர்கள் ஆம்புலன்சில் இருக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
free-land-in-kashmir-for-sri-lankan-cricketer-muralitharan-jammu-and-kashmir-government-in-controversy
இலங்கை கிரிக்கெட் வீரர் முரளீதரனுக்கு காஷ்மீரில் இலவச நிலம்: சர்ச்சையில் ஜம்மு காஷ்மீர் அரசு
what-the-police-did-in-the-middle-of-the-road-in-a-bmw
பி.எம்.டபிள்யூவில் வந்து சாலையின் மத்தியில் செய்த காரியம்... தட்டி தூக்கிய போலீஸ்
champions-trophy-betting-alone-is-worth-rs-5-000-crore-mistletoe-caught-in-delhi
சாம்பியன்ஸ் டிராபி : பெட்டிங் மட்டும் 5 ஆயிரம் கோடி டெல்லியில் சிக்கிய புல்லுருவிகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்

READ MORE ABOUT :