தங்கக் கடத்தல் விவகாரம், கேரள அமைச்சரிடம் மத்திய அமலாக்கத் துறை அதிரடி விசாரணை

வெளியுறவுத் துறையின் அனுமதி இல்லாமல் திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துடன் தொடர்பை ஏற்படுத்தி அன்பளிப்புகளை பெற்ற விவகாரம் தொடர்பாக கேரள அமைச்சர் ஜலீலிடம் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தியது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தால் கேரள அரசியலில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பரபரப்பு நிலவி வருகிறது. இந்தக் கடத்தல் தொடர்பாக தூதரகத்தின் முன்னாள் நிர்வாக செயலாளர் ஸ்வப்னா சுரேஷ், முன்னாள் பி.ஆர்.ஓ சரித்குமார் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவும் விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் சுங்க இலாகாவும், மத்திய அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் கேரள உயர் கல்வித்துறை அமைச்சரான ஜலீல் அமீரக தூதரகத்துடன் தொடர்பு வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது தெரியவந்தது. வெளியுறவுத் துறை சட்டத்தின்படி மாநில அமைச்சரோ, மாநில அரசு அதிகாரிகளோ ஒரு நாட்டின் தூதரகத்துடன் எந்த தொடர்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது.


ஆனால் அமைச்சர் ஜலீல் கடந்த சில மாதங்களுக்கு முன் தூதரகத்திடமிருந்து உணவுப் பொருளை பெற்று மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு விநியோகித்தது தெரியவந்தது, மேலும் அனுமதி இல்லாமல் தூதரக பார்சலில் துபாயிலிருந்து புனித குர்ஆன் நூல்களை வரவழைத்து விநியோகித்ததும் தெரியவந்தது. குர்ஆன் வந்த பார்சலில் வேறு ஏதேனும் பொருட்கள் இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டது.
இதையடுத்து அமைச்சர் ஜலீலிடம் மத்திய அமலாக்கத் துறை எந்த நேரத்திலும் விசாரணை நடத்தலாம் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை கொச்சியிலுள்ள மத்திய அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து அமைச்சர் ஜலீலிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 3 மணிநேரம் நடந்த விசாரணையில் தூதரக பார்சலில் குர்ஆன் தவிர வேறு ஏதேனும் பொருட்கள் கொண்டு வரப்பட்டதா, தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து அமைச்சரிடம் விவரங்கள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர் ஜலீலிடம் மத்திய அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது கேரள அரசியலில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :