செப்டம்பர் 25 நள்ளிரவு முதல் மீண்டும் ஊரடங்கா?

செப்டம்பர் 25 நள்ளிரவு முதல் இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று சமூக இணையதளங்களில் பரவும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அமலுக்கு வந்த முழு ஊரடங்கால் பொதுமக்கள் பட்ட அவதி கொஞ்ச நஞ்சமல்ல..... ஏராளமான தொழில்கள் அழிந்தன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். பலர் வருமானம் இழந்தனர். இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்தது. இந்த பாதிப்பிலிருந்து கரையேற இன்னும் பல வருடங்கள் ஆகும் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில் வரும் செப்டம்பர் 25 நள்ளிரவு முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது என்று சமூக இணையங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. கொரோனா நோய் பரவும் வேகம் தற்போது அதிகரித்து வருவதால் மத்திய பேரிடர் மேலாண்மை அமைப்பு இந்த ஆலோசனையை அரசுக்கு வழங்கியுள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு 46 நாட்கள் அமலில் இருக்கும் என்றும், மத்திய, மாநில அரசுகள் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல் வேகமாகப் பரவியதால் பொதுமக்கள் கடும் பீதியடைந்தனர். ஆனால் இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று பிரஸ் இன்பர்மேஷன் பீரோ அறிவித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அந்த தகவலை நம்ப வேண்டாம் என்றும் பிரஸ் இன்பர்மேஷன் பீரோ வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :