தொடரும் பிரச்சினைகள் பேரீச்சம்பழ சிக்கலில் தவிக்கும் கேரள அரசு

கடந்த சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரம் அமீரக தூதரகம் மூலம் கொண்டுவரப்பட்ட 17ஆயிரம் கிலோ பேரீச்சம்பழம் குறித்து கேரள அரசிடம் விளக்கம் கேட்க சுங்க இலாகா தீர்மானித்துள்ளது.



திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கேரள அரசு சிக்கலில் தவித்து வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுடன் நெருக்கமாக இருந்ததாக எழுந்த புகாரில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கு அடுத்ததாக ஸ்வப்னா சுரேஷுடன் கேரள உயர் கல்வித் துறை அமைச்சர் ஜலீல், கேரள மாநில சிபிஎம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கொடியேரி, கேரள தொழில் துறை அமைச்சரின் மகன் உள்பட பல பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே மேலும் ஒரு கேரள அமைச்சருக்கும் ஸ்வப்னாவுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவரிடமும் விசாரணை நடத்த மத்திய விசாரணைக் குழுக்கள் தீர்மானித்துள்ளன.
இதற்கிடையே தங்கக் கடத்தல் விவகாரம் வெளியே வந்த பின்னர் தான் தூதரக பார்சலில் அனுமதி இல்லாமல் மத நூல்கள் மற்றும் கிலோ கணக்கில் பேரீச்சம்பழம் கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கேரளாவில் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு வினியோகிப்பதற்காக இந்த பேரீச்சம்பழம் கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டது. மொத்தம் 17ஆயிரம் கிலோ பேரிச்சம்பழம் கொண்டுவரப்பட்டது. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு அவை கொடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த பேரீச்சம்பழம் வந்த பார்சலிலும் தங்கம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் விசாரணைக் குழுக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது தவிர மத நூல்கள் கொண்டு வரப்பட்ட பார்சலிலும் தங்கம் கடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.


இதையடுத்து இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக சுங்க இலாகா நேற்று 2 வழக்குகளை பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக கேரள அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கவும் சுங்க இலாகா முடிவு செய்துள்ளது. எவ்வளவு கிலோ பேரீச்சம்பழம் கொண்டுவரப்பட்டது, எங்கெல்லாம் விநியோகிக்கப்பட்டது உட்பட விவரங்களை கேரள அரசிடமிருந்து சேகரிக்க சுங்க இலாகா தீர்மானித்துள்ளது. இது தவிர தேசிய புலனாய்வு அமைப்பும் இது குறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds

READ MORE ABOUT :