கேரள அரசு லாட்டரியில் ₹12 கோடி பம்பர் கிடைத்தது யாருக்கு தெரியுமா?

கேரள அரசு லாட்டரியில் ₹12 கோடி முதல் பரிசு எர்ணாகுளத்தைச் சேர்ந்த கோயில் ஊழியர் ஒருவருக்குக் கிடைத்துள்ளது.கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ₹12 கோடி அறிவிக்கப்பட்டிருந்தது. டிக்கெட்டின் விலை ₹300 ஆகும். டிக்கெட் விலை சற்று அதிகமாக இருந்ததால் அவ்வளவாக டிக்கெட் விற்பனை ஆகாது என்றே கருதப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட 2.1 லட்சம் டிக்கெட்டுகள் அதிகமாக விற்பனையானது. மொத்தம் 44 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகின. இம்முறை டிக்கெட் விற்பனை மூலம் மட்டும் கேரள அரசுக்கு ₹22 கோடிக்கு மேல் லாபம் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில் ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டிபி 173964 என்ற எண்ணுக்கு முதல் பரிசான ₹12 கோடி கிடைத்தது. இந்த டிக்கெட் எர்ணாகுளத்தில் விற்பனையானது தெரியவந்தது. பரிசு விவரம் வெளியான அன்று அதிர்ஷ்டசாலி யார் என தெரியாமல் இருந்தது. இதையடுத்து அந்த அதிர்ஷ்டசாலியைப் பலரும் தேடிவந்தனர். இந்நிலையில் அந்த அதிர்ஷ்டசாலி எர்ணாகுளத்தில் உள்ள ஒரு கோவிலில் பணி புரியும் அனந்து விஜயன் (24) எனத் தெரியவந்தது.

இவரது சொந்த ஊர் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே உள்ள இரட்டையர் ஆகும். இவரது தந்தை விஜயன் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். தந்தையைப் பார்த்துத் தான் அனந்துவுக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து அனந்து கூறுகையில், பல வருடங்களாகவே லாட்டரி டிக்கெட் எடுத்து வருகிறேன். எனது தந்தையும் ஓணம் பம்பர் லாட்டரி எடுத்தார். ஆனால் எனக்குத் தான் அதிர்ஷ்டம் அடித்தது. பரிசு விவரம் தெரிந்த நேற்று காலையில் கூட எனக்குத் தான் முதல் பரிசு கிடைக்கும் என எனது நண்பர்களிடம் நான் விளையாட்டாகக் கூறினேன். அது இப்போது இப்போது உண்மையாகி விட்டது என்றார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds

READ MORE ABOUT :