கொரோனா பாதித்து மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி மரணம்

Union minister suresh angadi dies of covid

by Nishanth, Sep 23, 2020, 22:40 PM IST

கொரோனா பாதித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.
இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் பாதித்து மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. சமீப காலம் வரை நோயாளிகள் எண்ணிக்கை குறைவாக இருந்த கேரளாவில் கூட நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இன்று முதன் முதலாக அந்த மாநிலத்தில் நோயாளிகள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி சிகிச்சை பலனளிக்காமல் இன்று இரவு மரணமடைந்தார். கடந்த 11ம் தேதி இவருக்கு நோய் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சுரேஷ் அங்கடி மரணமடைந்தார். கொரோனா பாதித்து மரணமடையும் முதல் மத்திய அமைச்சர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அமைச்சர் சுரேஷ் அங்கடியின் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

You'r reading கொரோனா பாதித்து மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி மரணம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை