தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை 5 லட்சம் தாண்டியது.. கோவை, சேலத்தில் தொற்று அதிகரிப்பு..

corona tests crossed 5 lakhs in tamilnadu.

by எஸ். எம். கணபதி, Sep 24, 2020, 09:12 AM IST

தமிழகத்தில் இது வரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சேலம், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.தமிழக அரசு நேற்று (செப்.23) இரவு வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5325 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மாநிலம் முழுவதும் இது வரை 5 லட்சத்து 57,999 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.

எனினும் குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வேறு நோய் தாக்கம் இல்லாதவர்கள் ஒரு வாரத்திற்குள்ளாக கொரோனாவில் இருந்து மீண்டு விடுகிறார்கள். கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5363 பேரையும் சேர்த்து, இது வரை 5 லட்சத்து 2,740 பேர் குணம் அடைந்துள்ளனர். மேலும், கொரோனாவால் உயிரிழப்பவர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. ஆரம்பத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். தற்போது 60, 70 பேர் வரை உயிரிழக்கின்றனர்.

நோய்ப் பாதிப்பால் நேற்று 63 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 9010 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 46 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்திலும் தொடர்ந்து அதிகமானோருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் புதிதாக நோய் பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று 980 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 205 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 58,594 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 297 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 218 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 33,327 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 30,800 பேருக்கும் தொற்று பரவியிருக்கிறது.
கோவை மாவட்டத்தில் 587 பேருக்கும், சேலத்தில் 298 பேருக்கும், திருப்பூரில் 247 பேருக்கும், கடலூரில் 183 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் நேற்று மட்டும் 83,191 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 65 லட்சத்து 25,037 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

You'r reading தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை 5 லட்சம் தாண்டியது.. கோவை, சேலத்தில் தொற்று அதிகரிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை