மனைவி மீது சந்தேகம் 40 நாளே ஆன பிஞ்சுக் குழந்தையை ஆற்றில் வீசி கொன்ற கொடூரம்..!

திருவனந்தபுரத்தில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் 40 நாளே ஆன பிஞ்சு பெண் குழந்தையை வாலிபர் ஆற்றில் வீசிக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் திருவல்லம் அருகே உள்ள பாச்சல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் உண்ணிகிருஷ்ணன் (25). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு என்ற இடத்தை சேர்ந்த சிந்து என்ற பெண்ணுக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது.

திருமணத்திற்குப் பின்னர் ஒரு சில மாதங்கள் மட்டும் தான் இவர்களுக்கிடையே மகிழ்ச்சி இருந்தது. மனைவி மீது எப்போதும் உன்னிகிருஷ்ணனுக்குச் சந்தேகம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.இதற்கிடையே சிந்து கர்ப்பிணியானார். இதன் பின்னரும் நாளுக்கு நாள் தகராறு அதிகரித்ததைத் தொடர்ந்து அவர் தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டார்.

இந்நிலையில் கடந்த மாதம் சிந்துவுக்குப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 40 ஆவது நாளான நேற்று சிந்துவின் வீட்டில் வைத்து குழந்தைக்கு நூல் கட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் உண்ணிகிருஷ்ணனும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் குழந்தையைத் தனது தாயிடம் காண்பித்து வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை.இதனால் சந்தேகமடைந்த சிந்து இது குறித்து திருவல்லம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் உண்ணிகிருஷ்ணனை பிடித்து விசாரித்த போது குழந்தையை அவர் அங்குள்ள ஆற்றில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து சென்று ஆற்றில் தேடினர். ஆனால் அந்த குழந்தையைச் சடலமாகவே மீட்க முடிந்தது. இதையடுத்து உண்ணிகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் தான் குழந்தையைக் கொன்றதாக அவர் போலீசிடம் தெரிவித்துள்ளார். 40 நாள் மட்டுமே ஆன பிஞ்சுக் குழந்தையை தந்தையே ஆற்றில் வீசி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :