உலகிலேயே நீளமான சுரங்க நெடுஞ்சாலையை பிரதமர் திறந்து வைக்கிறார்..

மணாலி - லே நகருக்கு இடையே கட்டப்பட்டுள்ள உலகிலேயே நீளமான சுரங்க நெடுஞ்சாலையைப் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இமாசலப் பிரதேசத்தில் 10 ஆயிரம் அடி உயரத்தில், உலகிலேயே நீளமான சுரங்க நெடுஞ்சாலைப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. வாஜ்பாய் பெயரில் அடல் சுரங்கப்பாதை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாதையைப் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

இமாசலப் பிரதேசத்தில் மணாலியில் இருந்து லே நகருக்கு மலையைக் குடைந்து 9.02 கி.மீ. நீளத்திற்குச் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் உலகிலேயே நீளமான சுரங்க நெடுஞ்சாலை ஆகும்.

இந்த இருவழிச் சாலையின் மூலம் மணாலியில் இருந்து லே செல்லும் தூரத்தில் 46 கி.மீ. குறைகிறது. பயண நேரத்தில் நான்கைந்து மணி நேரம் குறையும். இந்த சாலையில் தினமும் 3 ஆயிரம் கார்களும், 1500 லாரிகளும் செல்லலாம். பல பாதுகாப்பு அம்சங்களும் இந்த சுரங்கச் சாலையில் உள்ளன. ஒவ்வொரு 150 மீட்டர் இடைவெளியில் தொலைபேசி வசதி, 60 மீட்டர் இடைவெளியில் தீயணைப்பு கருவிகள், 250 மீட்டர் இடைவெளியில் கண்காணிப்பு கேமராக்கள், 500 மீட்டர் தூரத்தில் அவசர வெளியேறும் வழிகள் என்று அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த சுரங்கம் அமைப்பதற்கு கட்த 2000ம் ஆண்டில் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அரசு முடிவு செய்தது. 2002ல் மே 26ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த சுரங்கப் பாதைக்கு அடல் சுரங்கப் பாதை என்று பெயரிடுவதற்குப் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது.இந்நிலையில், இன்று காலை இந்த சுரங்கப்பாதையைப் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்காக அவர் தனி விமானத்தில் சண்டிகருக்கு வந்தார். அங்கிருந்து சுரங்கப்பாதை ஆரம்ப இடத்திற்கு காரில் வந்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds