6 மாத இஎம்ஐக்கான கூட்டு வட்டி விவகாரம் மத்திய அரசின் விளக்கத்தில் திருப்தி இல்லை உச்சநீதிமன்றம் கருத்து

கொரோனா காலத்தில் வங்கிகளில் 6 மாதம் காட்டாமல் இருந்த இஎம்ஐக்கு அபராத மற்றும் கூட்டு வட்டியை ரத்து செய்திருப்பதாக தெரிவித்த மத்திய அரசின் விளக்கத்தில் திருப்தி இல்லாததால் மீண்டும் ஒரு வாரத்தில் விரிவாக பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கொரோனா காரணமாக பலரும் வேலை இல்லாமலும், சம்பளம் இல்லாமலும் தவித்தனர். இதையடுத்து வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கான இஎம்ஐ கட்டுவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாதங்களுக்கு இஎம்ஐ கட்ட விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த காலத்தில் கடன் தொகைக்கு அபராத மற்றும் கூட்டு வட்டி விதிக்கப்படும் என்று வங்கிகள் அறிவித்தன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. வங்கிகளின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பலமுறை விசாரணை நடந்த போதும் அபராத மற்றும் கூட்டு வட்டியை ரத்து செய்ய முடியாது என்று மத்திய அரசு தெரிவித்தது.

வட்டியை ரத்து செய்தால் வங்கிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றும் கூறியது. ஆனால் உச்சநீதிமன்றம் வட்டியை ரத்து செய்ய வேண்டுமென கண்டிப்புடன் கூறியதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தது. அதில் 2 கோடி ரூபாய் வரை கடன் வாங்கியவர்களுக்கு 6 மாதத்திற்கான அபராத மற்றும் கூட்டு வட்டி ரத்து செய்யப்படுவதாக கூறியது.
இந்நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், இது தொடர்பாக ஒரு வாரத்தில் சந்தேகங்களை நிவர்த்தி செய்து மீண்டும் ஒரு பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நீதிபதி அசோக் பூஷண் உத்தரவிட்டுள்ளார். மேலும் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ள விவரங்கள் முழுவதையும் படித்து அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் 1 வாரத்தில் தெரிவிக்கும்படி மனுதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து இந்த வழக்கு மீதான விசாரணையை 13ம் தேதிக்கு நீதிபதி அசோக் பூஷண் தள்ளி வைத்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :