பாஜக தேசிய துணைத் தலைவர் கார் மீது லாரியை மோதியதாக பரபரப்பு புகார்...!

பாஜக தேசிய துணைத் தலைவரான கேரளாவைச் சேர்ந்த அப்துல்லா குட்டி சென்றுகொண்டிருந்த கார் மீது லாரியை மோதி அவரை கொல்ல முயற்சித்ததாக பரபரப்பு புகார் கூறப்பட்டுள்ளது.கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் அப்துல்லா குட்டி. முதலில் இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். இக்கட்சியின் சார்பில் 2 முறை இவர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் அக்கட்சியிலிருந்து வழங்கி காங்கிரசில் இணைந்தார். பின்னர் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். இதன் பின்னர் இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகி சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தார். இக்கட்சியில் சேர்ந்த ஒரு சில மாதங்களிலேயே மூத்த தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு இவர் உயர் பொறுப்புக்கு வந்தார்.

சமீபத்தில் பாஜகவில் முக்கிய பொறுப்புகளுக்கு நியமனம் நடந்தது. இதில் அப்துல்லா குட்டிக்குத் தேசிய துணைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. இது கேரள பாஜகவில் இருக்கும் சில மூத்த தலைவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இந்நிலையில் அப்துல்லா குட்டி நேற்று இரவு திருவனந்தபுரத்தில் இருந்து கண்ணூருக்கு காரில் சென்றார். மலப்புரம் என்ற இடத்தில் இவர் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டார். சாப்பிட்டு விட்டு வெளியே வந்தபோது அவரிடம் சிலர் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதன் பின்னர் காரில் ஏறி அவர் சென்று கொண்டிருந்தபோது திடீரென பின்னால் வந்த ஒரு லாரி 2 முறை இவரது கார் மீது மோதியது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர் காரை நிறுத்தி விட்டு இறங்கினார். இந்த சம்பவத்தில் காரின் பின்புறம் சேதமடைந்தது. இது தன்னை கொல்ல நடந்த திட்டமிட்ட சதி என்று அப்துல்லா குட்டி கூறுகிறார். இது குறித்து அவர் காடாம்புழா போலீசில் புகார் செய்துள்ளார். கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் இது குறித்துக் கூறுகையில், இது பாஜக தேசியத் துணைத் தலைவர் அப்துல்லா குட்டியைக் கொல்வதற்காக நடந்த சதியாகும். எனவே இதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக போராட்டத்தில் ஈடுபடும். இதுகுறித்து போலீசார் உடனடியாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds