வரும் டிசம்பர் முதல் 24 மணி நேரமும் இனி ஆர்டிஜிஎஸ் வசதி...!

ஆன்லைன் மூலம் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் ஆர்டிஜிஎஸ் வசதி வரும் டிசம்பர் முதல் 24 மணி நேரமும் இயங்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கிக்குச் செல்லாமல் ஆன்லைன் மூலம் தாங்களாகவே ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்குப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதி நடைமுறையில் இருந்து வருகிறது.

இதில் இரண்டு விதமான நடைமுறை தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. என். இ.எப்.டி எனப்படும் நேஷனல் எலக்டிரானிக் ஃபண்ட் டிரன்ஸ்ஃபர் என்பது ஒரு வகை. ரியல் டைம் கிராஸ் செட்டில்மெண்ட் சிஸ்டம் எனப்படும் ஆர்டிஜிஎஸ் என்பது மற்றொரு வகை.

இதில் என். இ.எப்.டி மூலம் இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் அதற்கு மேல் ஆர்டிஜிஎஸ் முறையில்தான் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.மேலும் இந்த விதமான இந்த வித ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாக வசூலித்து வந்தன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு இதற்கான கட்டணங்களை ரிசர்வ் வங்கி முழுமையாக ரத்து செய்தது.

இந்த இருவித பணப் பரிமாற்ற வசதி இந்த சேவை தற்போது வங்கி வேலை நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பிறகு பயன்படுத்த முடியாது என்பதால் பலருக்கும் இதனால் பயனில்லாத நிலை இருந்து வந்தது. ஏடிஎம் சேவையைப் போல இந்த சேவையையும் 24 மணி நேரமும் பயன்படுத்த வழி செய்ய வேண்டும் என வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து வரும் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து ஆர்டிஜிஎஸ் சேவையை எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் பயன்படுத்திக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார். நேற்று ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையை வெளியிட்ட கவர்னர் சக்தி காந்த தாஸ் இந்த அறிவிப்பையும் தொடர்ந்து வெளியிட்டார். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :