மூணாறில் குறைந்த கட்டணத்தில் ஏசி அறை வேண்டுமா? அரசு பஸ் தயார்.

மூணாறில் குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கு ஒரு புதிய திட்டத்தை கேரள அரசு போக்குவரத்து கழகம் தயாரித்துள்ளது.

கேரள அரசு போக்குவரத்து கழகம் தற்போது மிகக் கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஒரு மாதத்திற்கு சராசரியாக ₹60 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. நஷ்டத்தை சரிக்கட்டி அரசுப் போக்குவரத்துக் கழகத்தை லாபத்தில் கொண்டு வர கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் நாளுக்கு நாள் நஷ்டம் கூடிக் கொண்டு வருகிறதே தவிர எந்த பலனும் இதுவரை ஏற்படவில்லை. கேரள அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு நஷ்டம் அதிகரிக்க தொழிலாளர் சங்கங்கள் தான் காரணம் என கூறப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் எந்த உயர் அதிகாரி வந்தாலும் அவர் ஒரு சில மாதங்களிலேயே விரட்டி அடிக்கப்படுவார்கள். தொழிலாளர் சங்கங்களின் வலிமைக்கு முன்னால் அரசால் கூட ஒன்றும் செய்ய முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரியான பிஜு பிரபாகர் என்பவரை அரசு நியமித்தது. இவர் சில அதிரடி திட்டங்களை நிறைவேற்றி போக்குவரத்து கழகத்தை லாபத்தில் கொண்டுவர முடியுமா என ஆலோசித்து வருகிறார். இதன்படி அரசு பஸ்சை சுற்றுலா பயணிகள் தங்கும் கெஸ்ட் ஹவுசாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மூணாறில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த இதன் நிர்வாக இயக்குனர் பிஜு பிரபாகர் தீர்மானித்துள்ளார். இதன்படி ஏசி பஸ் 16 பேர் தங்கும் வகையில் மாற்றப்பட உள்ளது. ரயில்களில் ஸ்லீப்பர் கோச் இருப்பது போல தனித்தனியாக 16 பேர் படுத்து தூங்கலாம்.

ஒவ்வொரு படுக்கையிலும் செல்போன் சார்ஜர், பொருட்களை வைக்கும் இடம் உள்பட அனைத்து வசதிகளும் இருக்கும். இந்த பஸ்கள் மூணாறு டெப்போவில் நிறுத்தப்பட்டிருக்கும். அங்குள்ள கழிப்பறைகளை பஸ்சில் தங்குபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான கட்டணம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. கட்டணம் மிகக் குறைவாகவே இருக்கும் என்று அரசு போக்குவரத்து கழக நிர்வாகிகள் கூறுகின்றனர். இந்த திட்டம் வெற்றி பெற்றால் மேலும் பல சுற்றுலா மையங்களில் இதேபோல தங்கும் பஸ் வசதி ஏற்படுத்தப்படும் என்று நிர்வாக இயக்குனர் பிஜு பிரபாகர் கூறுகிறார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds

READ MORE ABOUT :