வீட்டு கடனுக்கு வட்டி இனி குறையும்...?

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.பெரிய அளவிலான வீட்டுக் கடன்களை வழங்க வங்கிகளுக்கு ஆகும் செலவைக் குறைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது ,இதன் காரணமாக வட்டி விகிதங்கள் குறையும் சூழ்நிலை உருவாக்கியிருக்கிறது. தற்போது, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் கடன் தொகையின் அளவுடன் இணைக்கப்பட்டுள்ளன.30 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மிகக் குறைவு. கடனின் அளவு அதிகமானால் வட்டி விகிதமும் உயரும்.

ஸ்டேட் வங்கியில் ரூ.30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடனுக்கு 7 சதவீத வட்டியும் 30 லட்சம் முதல் 75 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு 7.25 சதவீத வட்டியும் வசூலிக்கப்படுகிறது. 75 லட்ச ரூபாய்க்கு மேலான வீட்டுக் கடனுக்கான வட்டி 7.35 சதவீதமாகும் .பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களைப் பராமரிக்க நிர்ணயிக்கப்பட்ட மூலதனத்தில் 100 சதவீதம் வங்கிக்குத் தேவை. ஆனால் இதற்கு மாறாகக் கடன் வழங்குநர்கள் வீட்டுக் கடன்களுக்குக் குறைந்த மூலதனத்தைக் கொண்டிருக்க அனுமதிக்கப்படுகிறார்கள், ஏனெனில் அவை பாதுகாப்பாகக் கருதப்படுகின்றன.

கடன் அளவைத் தவிர, மூலதனத் தேவைகள் சொத்தின் மதிப்புடன் ஒப்பிடுகையில் கடன் தொகையைப் பொறுத்து உள்ளது. இது கடனுக்கு மதிப்பு (எல்டிவி) என்றும் அழைக்கப்படுகிறது.ஒரு வீட்டின் உரிமையாளர் 20 சதவீத சொத்து மதிப்பைத் தானே பங்களித்து மீதம் 80 சதவீத தொகைக்குக் கடன் வாங்கினால், வங்கியின் மூலதனத் தேவை குறைவாகவே இருக்கும். இதான் மூலம் வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த விகிதங்களின் படி வட்டி வழங்க வழி செய்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள கடன் கொள்கை குறித்த அறிவிப்புகளில், 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வரை வங்கிகளுக்கான மூலதன தேவைகள் கடனுக்கான மதிப்பு அடிப்படையில் மட்டுமே நிர்ணயிக்கப்படும். கடனின் அளவை பொறுத்து அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகளவிலான வீட்டுக் கடன்களின் வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்புள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :