கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் புதிய முறை .. ஓடிபி இருந்தால் தான் சிலிண்டர்..!

வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி வாடிக்கையாளர்களின் செல்போன்களில் வரும் ஓடிபியை காண்பித்தால் மட்டுமே சிலிண்டர் கிடைக்கும்.கடந்த பல வருடங்களுக்கு முன்பு வரை கேஸ் சிலிண்டர் கிடைக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சிக்கு போன் செய்து விவரத்தைக் கூற வேண்டும். அதன் பிறகு தான் நமக்கு சிலிண்டர் வரும்.

ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன் ஐவிஆர்எஸ் எனப்படும் தானியங்கி பதிவு முறை கொண்டுவரப்பட்டது. இதில் நமது செல்போன் எண்ணை முதலில் பதிவு செய்ய வேண்டும். அந்த செல்போன் எண்ணிலிருந்து சிலிண்டரை புக் செய்தால் உடனடியாக நமது செல்போனுக்கு எஸ்எம்எஸ் வரும். அதில் நம்முடைய பதிவு எண் உட்பட விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால் இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அரசுக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதைத் தடுப்பதற்காக புதிய ஓடிபி முறையைக் கொண்டுவர நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி சிலிண்டரை புக் செய்தால் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு உடனடியாக ஒரு ஓடிபி நம்பர் வரும். அதே எண் சிலிண்டரை டெலிவரி செய்பவரின் செல்போனுக்கும் செல்லும். நமக்கு வந்த ஓடிபி நம்பரை காண்பித்தால் மட்டுமே நமக்கு சிலிண்டர் கிடைக்கும். நம்முடைய செல்போன் நம்பரில் ஏதாவது மாற்றம் இருந்தால் உடனடியாக அதை அப்டேட் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சிலிண்டர் கிடைக்காது.

மேலும் ஏஜென்சியில் நாம் அளித்த முகவரியில் மாற்றம் இருந்தாலும் உடனடியாக அதைப் புதுப்பிக்க வேண்டும். முதல் கட்டமாக இந்தியாவில் 100 நகரங்களில் இந்த புதிய திட்டத்தை அமல்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு விட்டது. மற்ற நகரங்களுக்கு நவம்பர் 1 முதல் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. வணிக ரீதியிலான சிலிண்டர்கள் விநியோகத்திற்கு இந்த முறை அமல்படுத்தப் பட மாட்டாது. வீட்டுத் தேவைக்கான சமையல் எரிவாயு பயன்பாட்டில் வருடத்திற்கு இந்தியாவில் 3.3 சதவீதம் வளர்ச்சியடைந்து வருகிறது. இதே நிலையில் சென்றால் 2030ல் சமையல் எரிவாயு பயன்பாடு 3.4 கோடி டன்னை அடையும்.இதனால் 2030க்குள் வீட்டுத் தேவைக்கான சமையல் எரிவாயு பயன்பாட்டில் இந்தியா சீனாவை முந்தும் எனக் கருதப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :