கொரோனாவாவது ஒன்னாவது.. பீகார் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் குவியும் மக்கள்

பீகாரில் அடுத்த வாரம் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையல் , எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவின் தேர்தல் கூட்டங்களில் மக்கள் கட்டுக்கடங்காமல் கூடி அதிர வைக்கின்றனர். கொரோனா வைரஸ் விதிகளுக்கு மீறியதாக இருந்தபோதிலும் பிரச்சாரம் நடக்கும் இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

பிரச்சாரம் அதிகாலையில் சரி , மாலையில் சரி எந்த நேரம் நடந்தாலும் , மக்கள் கூட்டம், பெரும்பாலான இடங்களில் 8ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வதாகவும் சில இடங்களில் 15ஆயிரம் பேர் கலந்து கொள்வதாகவும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினர் தெரிவித்தனர். இவர்களில் யாரும் முக கவசம் அணிவதில்லை. சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை. கொரானா தொற்றும் எனப் பயம் கொஞ்சம் கூட இவர்களிடம் இல்லை.

இந்த பிரச்சாரங்களைத் தொடர்ந்து கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் பிரச்சாரத்தில் இவ்வளவு பேர் கலந்து கொள்வார்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடல்போல் திரண்ட இந்த மக்கள் தங்களுக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்பதையும், பீகார் மாநிலத்தின் வளர்ச்சி வேண்டும் என்பதையும் சொல்லாமல் சொல்லி உள்ளனர். திறமையற்ற என்டிஏ அரசு கடந்த 15 ஆண்டுகளாகப் பீகார் மாநிலத்தைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறது, இனி வளர்ச்சிப் பாதையில் செல்வோம், என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் கொரானா தொற்று தடுப்பு விதிகளை மீறி மக்கள் கூடியதைப் பற்றி அவர் ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை மூத்த ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும் செய்தித் தொடர்பாளருமான சிவானந்த் திவாரி கூறுகையில் பிரசாரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியதைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம், இதிலிருந்து மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்று தெரிகிறது, இதுவே முதலமைச்சர் நிதீஷ் குமாருக்குப் பேரிடியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நிச்சயம் மக்கள் மாற்றத்திற்குத் தயாராகி விட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds

READ MORE ABOUT :