டிஒய்எப்ஐ தொண்டரால் பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுமி தீக்குளிப்பு...!

கேரளாவில் டிஒய்எப்ஐ தொண்டரால் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவரான டிஒய்எப்ஐ தொண்டரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் இடுக்கி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே உள்ள நரியம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் மனு மனோஜ் (24). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (டிஒய்எப்ஐ) தொண்டரான இவர், அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

இந்நிலையில் மனோஜுக்கு அப்பகுதியைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியுடன் தொடர்பு ஏற்பட்டது. அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பல இடங்களுக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இந்த விவரம் அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் கட்டப்பனை போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் மனோஜை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் புகார் எழுந்தது. இதையடுத்து மனோஜைக் கைது செய்யக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பாஜகவினர் கட்டப்பனை போலீஸ் நிலையம் முன் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று அந்த சிறுமி தனது வீட்டுக் குளியலறையில் வைத்து உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தார். அந்த சிறுமியின் அலறலைக் கேட்டு விரைந்து சென்ற பெற்றோர் தீயை அணைத்தனர்.

அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். உடலில் 40 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்ட அந்த சிறுமிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்துக் கட்டப்பனை போலீசார் வழக்குப் பதிவு செய்து மனோஜை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த மனோஜை போலீசார் இன்று கைது செய்தனர். இதற்கிடையே மனோஜை தங்களது அமைப்பிலிருந்து நீக்கியுள்ளதாக இடுக்கி மாவட்ட டிஒய்எப்ஐ அமைப்பு தெரிவித்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds