டெல்லியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் அபாயம்.

டெல்லியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் என்று டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் தொடக்க கட்டத்தில் நோயாளிகள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்த மாநிலங்களில் ஒன்று டெல்லி. பல மாதங்கள் இங்கு தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால் டெல்லியில் உள்ள வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட மாட்டாது என்று டெல்லி அரசு அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து டெல்லி அரசு இந்த உத்தரவை பின்னர் வாபஸ் பெற்றது. டெல்லியில் இதுவரை 3.51 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3.19 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 6,225 பேர் மரணமடைந்துள்ளனர். தற்போது 26, 477 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக டெல்லியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 4,116 பேருக்கு நோய் பரவியது. கடந்த 35 நாட்களில் நேற்று தான் மிக அதிகம் பேருக்கு நோய் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இந்நிலையில் டெல்லியில் விரைவில் மீண்டும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் என்று டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். நவராத்திரி விழா நடைபெற்று வருவதாலும், தீபாவளி பண்டிகை மற்றும் குளிர் காலம் நெருங்கி வருவதாலும் டெல்லியில் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 12,000 முதல் 14,000 வரை இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தினமும் 15 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான வசதிகள் தயாராக இருப்பதாக அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds