பீகார் சட்டசபை தேர்தல்.. 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு.. வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வம்..

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அக்டோபர் 28ம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதன்படி, முதல் கட்டத் தேர்தல் நடக்கும் 71 சட்டசபை தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தொகுதிகளில் மொத்தம் 1066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 33 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. பல இடங்களில் மக்கள் அதிகாலையிலேயே வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். லகிசாரை உள்பட சில வாக்குச்சாவடிகளில் வாக்கு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டதால், மாற்று இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.

இதற்கிடையே, அவுரங்கபாத் மாவட்டத்தில் திப்ரா பகுதியில் 2 வெடிக்காத குண்டுகளை சி.ஆர்.பி.எப் போலீசார் கண்டுபிடித்தனர். அவற்றைப் பத்திரமாக எடுத்துச் சென்று சக்தியிழக்க வைத்தனர். பிரச்சனைக்குரிய பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், பீகார் வாக்காளர்கள் அனைவரும் கோவிட்19 கட்டுப்பாடுகளைப் பின்பற்றி வாக்களிக்க வேண்டுமென்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இன்று காலை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், தேர்தல் என்னும் ஜனநாயகத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் அளித்த பேட்டியில், பீகார் மக்கள் ஒரு புதிய மாற்றத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds