ரிசர்வ் வங்கியின் காசோலை துண்டிப்பு முறை எனும் புதிய திட்டம்!

வணிகம், சொந்த செலவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காகப் பணம் பெறவோ அல்லது பணம் செலுத்தவோ நாம் காசோலை முறைகளைப் பயன்படுத்துகிறோம். இந்த காசோலைகளைப் பணமாக மாற்றும் போது, பணம் பெறும் நபரின் வங்கிக் கணக்கு எண், பெயர் ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும்.

இந்நிலையில் கையெழுத்திட்ட காசோலை தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ அந்த காசோலை மூலம் வேறு நபர்கள் பணம் பெற வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க காசோலை தொலைந்தவுடன் சம்பந்தப்பட்ட வங்கிக்குத் தகவல் தெரிவித்து பணம் கொடுப்பதை நிறுத்தி வைக்க முடியும். காசோலை பரிவர்த்தனை உள்ள வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றாலும் பணப்பட்டுவாடாவை நிறுத்தி வைக்க முடியும்.

ஆனாலும் இதில் பல்வேறு பிரச்சினைகளும், நடைமுறை சிக்கல்கள் மற்றும் தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் காலதாமதம் போன்றவற்றால் நம்பகத்தன்மையை இழக்கும் வாய்ப்பும் மற்றும் பணத்தை இழக்கும் வாய்ப்பும் உள்ளது.எனவே இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் காசோலை பரிவர்த்தனை செய்யும்போது அது தொடர்பாக வங்கிகளுக்கு முன்னரே தெரிவிக்க வேண்டும் என்று புதிய திட்டத்தை ரிசர்வு வங்கி அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த திட்டத்தின் பெயர் " காசோலை துண்டிப்பு முறை" ஆகும். இந்த திட்டம் ஜனவரி 1 ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் காசோலையை வங்கியில் செலுத்துவதற்கு முன் எஸ்.எம்.எஸ்., மொபைல் பேங்கிங் மற்றும் இண்டர்நெட் பேங்கிங் மூலம் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அதில் பணத்தைப் பெறுபவரின் பெயர், தொகை மற்றும் தேதி ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும்.

இதற்கான ஏற்பாடுகளை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூ.5 இலட்சத்திற்கு மேல் பரிவர்த்தனை செய்யப்படும் காசோலைகளுக்கு இந்த திட்டத்தைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :