வெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை... மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

வெங்காயம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். வெங்காயம் அதிக அளவில் விளையும் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானாவில் கடுமையாக மழை பெய்ததால் வெங்காய விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காய வரத்து குறைந்து, விலை படிப்படியாக உயர்ந்து ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயைத் தாண்டியது. இந்த நிலையில் வெங்காய விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : வெங்காயம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஏற்றுமதிக்குத் தடை விதித்ததுடன் . இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. இதைத் தொடர்ந்து , தனியார் வர்த்தகர்கள் இதுவரை 7 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளனர். நபெட் என்ற கூட்டுறவு அமைப்பும் வெங்காயத்தை இறக்குமதி செய்து வருகிறது. எகிப்து, ஆப்கானிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு முன் மேலும் 25 ஆயிரம் டன் வெங்காயம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் சம்பா பருவ வெங்காயம் அடுத்த மாதம் சந்தைக்கு வந்து விடும்.இதன்மூலம் வெங்காயம் வரத்து அதிகரித்து, விலை கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

தற்போது மத்திய தொகுப்பில் உள்ள வெங்காயம் வெளிச்சந்தைக்கு அனுப்பபட்டு வருகிறது. பதுக்கலை கட்டுப்படுத்தும் நோக்கில் வெங்காயத்தை வியாபாரிகள் இருப்பு வைக்க உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் படிப்படியாக வெங்காயத்தின் சில்லரை விலை ஒரு ஸ்திரமான நிலையை அடைந்துள்ளது.இதே போல உருளைக்கிழங்கின் விலையும் உயர்ந்து வருகிறது. எனவே, அதையும் மத்திய அரசு இறக்குமதி செய்கிறது. இன்னும் ஓரிரு நாளில் பூடானில் இருந்து 30 ஆயிரம் டன் உருளைக்கிழங்கு வந்து சேரும். மேலும் 10 லட்சம் டன் உருளைக்கிழங்கை இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உருளைக்கிழங்கின் விலையும் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

இவ்வாறு பியூஸ் கோயல் தெரிவித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds

READ MORE ABOUT :