16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த டிஒய்எப்ஐ தொண்டர் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை

16 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட டிஒய்எப்ஐ தொண்டர் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம் இடுக்கியில் இந்த சம்பவம் நடந்தது. பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி பின்னர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே உள்ள நரியம்பாறை பகுதியை சேர்ந்தவர் மனு மனோஜ் (24).

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினரான இவர், அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதான தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியைக் காதலித்து வந்தார். அந்த சிறுமி அப்பகுதியில் ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மனு மனோஜ் அந்த மாணவியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து வந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த விவரம் சிறுமியின் பெற்றோருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து மனு மனோஜுக்கு எதிராக அந்த சிறுமியின் பெற்றோர் கடந்த மாதம் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் மனு மனோஜ் தலைமறைவானார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மாணவி வீட்டுக் குளியலறையில் உடலில் மண்எண்ணையை ஊற்றித் தீக்குளித்தார். இதில் பலத்த காயமடைந்த அந்த சிறுமியை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதற்கிடையே தலைமறைவாக இருந்த மனு மனோஜை போலீசார் கைது செய்து இடுக்கி மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி சிகிச்சை பலனின்றி கடந்த 31ம் தேதி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் மனு மனோஜ் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் இடுக்கி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனு மனோஜ் இன்று கழிப்பறையில் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். இதையடுத்து சிறை அதிகாரிகள் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இடுக்கி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :