விசாரணைக்கு ஆஜராக கேரள அமைச்சருக்கு சுங்க இலாகா மீண்டும் நோட்டீஸ்

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் மூலம் மத நூல்கள் மற்றும் பேரீச்சம்பழம் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் ஜலீல் 9ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக கூறி சுங்க இலாகா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பும், மத்திய அமலாக்கத் துறையும் இவரிடம் விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரகம் மூலம் 30 கிலோ தங்கம் கடத்திய வழக்கு கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுடன் நெருக்கமாக இருந்ததால் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

தற்போது இவர் மத்திய அமலாக்கத் துறையின் காவலில் விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஸ்வப்னாவுடன் கேரளா அமைச்சர்கள் உள்படப் பல முக்கிய பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. ஸ்வப்னாவுடனான நெருக்கத்தைப் பயன்படுத்தி கேரள உயர் கல்வித்துறை அமைச்சரான ஜலீல், தூதரக பார்சலில் மத நூல்கள் மற்றும் பேரீச்சம்பழத்தைக் கொண்டு வந்தது தெரியவந்தது.இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு, சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத் துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் அமைச்சர் ஜலீலிடம் தேசிய புலனாய்வு அமைப்பும், மத்திய அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தின. அமைச்சர் ஜலீலிடம் மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தியது கேரள அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமைச்சர் ஜலீலிடம் சுங்க இலாகாவும் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது. வரும் 9ம் தேதி கொச்சியில் உள்ள சுங்க இலாகா தலைமை அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி அமைச்சர் ஜலீலுக்கு இன்று சுங்க இலாகா நோட்டீஸ் கொடுத்துள்ளது. அமைச்சர் ஜலீலிடம் சுங்க இலாகா விசாரணை தீர்மானித்துள்ளது கேரள அரசியல் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :