ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு: தெலுங்கானா, ஆந்திர வீரர்கள் வீர மரணம்
ஜம்மு-காஷ்மீரில் நேற்று இரவு தீவிரவாதிகள் மற்றும் இந்திய இராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.இதில் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவரும் , ஆந்திராவைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் கோமன் பல்லியைச் சேர்ந்த ராடா மகேஷ் , ஆந்திராவில் சித்தூர் மாவட்டம், ஐரால மண்டலம் ரெட்டிவாரிபல்லே கிராமத்தைச் சேர்ந்த சிக்கலா பிரவீன்குமார் ரெட்டி (37) ஆகியோர் வீர மரணம் அடைந்துள்ளார்.
பிரவீன் குமார் ரெட்டி 18 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை படைப்பிரிவில் ராணுவத்தில் சேர்ந்தார். இவருக்கு மனைவி ரஜிதா, ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். பிரவீன் குமார் ரெட்டி ஹவல்தாராக பணியாற்றி கமாண்டோ பயிற்சி பெற்று வருகிறார்.
காஷ்மீருக்கு ஏராளமான தீவிரவாதிகளைப் பாகிஸ்தானில் இருந்து அனுப்பி அமைதியைச் சீர்குலைக்க முயற்சி செய்ய சுமார் 50 தீவிரவாதிகள் தயாராக இருப்பதாக உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
You'r reading ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு: தெலுங்கானா, ஆந்திர வீரர்கள் வீர மரணம் Originally posted on The Subeditor Tamil
More India News