டெல்லியை மீண்டும் மிரட்டும் கொரோனா.. தீவிர நடவடிக்கை என கெஜ்ரிவால் தகவல்

டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் வேகமாக அதிகரிக்கிறது. நோயைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 7 முதல் 10 நாட்களுக்குள் நிலைமை சீரடையும் என்றும் முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். கொரோனா பரவலின் தொடக்க கட்டத்தில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்த மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. நாளடைவில் இங்கு நோயாளிகள் எண்ணிக்கை வெகுவாக குறையத் தொடங்கியது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த புதன்கிழமை 8,593 பேருக்கு நோய் பரவியது. அன்று 85 பேர் மரணமடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் 7,053 பேருக்கு நோய் பரவியது. 104 பேர் மரணமடைந்தனர். இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,400ஐ தாண்டியுள்ளது. டெல்லியில் மீண்டும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்தது.

ஊரடங்கு சட்ட நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் சரியாக இல்லை என்று உயர்நீதிமன்றம் விமர்சித்தது. பொதுமக்கள் உயிருடன் அரசு விளையாடுவதை அனுமதிக்க முடியாது என்றும், பொதுமக்களின் உடல் நலனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தனியார் மருத்துவமனைகளையும் ஈடுபடுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது: கடந்த சில தினங்களாக டெல்லியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது எனக்கும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. நோய் பரவலை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அடுத்த வாரம் மீண்டும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி வரும். அடுத்த 7 முதல் 10 நாட்களுக்குள் நோயின் தீவிரம் குறையும் என்று கருதுகிறேன். சுற்றுச்சூழல் மாசு தான் நோய் பரவ முக்கிய காரணமாகும். கிராமங்களில் விவசாய பொருட்களின் கழிவுகளை எரிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இவற்றை எரிப்பது தான் சுற்றுச்சூழல் மாசு அதிகரிக்க காரணமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds