தாய்லாந்து மக்களை சோகத்தில் ஆழ்த்திய என்கா சன் யானை... என்ன காரணம்?!

யானைகள் அதிகம் வாழும் நாடுகளில் தாய்லாந்தும் ஒன்று. அந்நாட்டின் தேசிய விலங்காக யானை திகழ்கிறது. தாய்லாந்து நாட்டில் 2000 மேற்பட்ட யானைகள் காட்டு பகுதிகளில் வசித்து வருகிறது சமீபத்திய கணக்கெடுப்பு. இதுபோக வளர்ப்பு யானைகள் வேற உள்ளன.

இந்நிலையில் கடந்த மாதம் தாய்லாந்து நாட்டின் ரேயாங் மாகாணத்தில் என்கா சன் என்ற பெயருடைய யானை ஒன்று பார்பபதற்கே மோசமான நிலையில் உடல் நிலை குன்றி மயக்கமடைந்த நிலையில் தோப்பு ஒன்றில் மீட்கப்பட்டது. உடனடியாக வனவிலங்கு மருத்துவர்கள் யானைக்கு சிகிச்சை அளிக்க வந்தனா். யானையின் உடலை சோதனை செய்த போது 15 இடங்களுக்கு மேல் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இருப்பதை கண்டனா். மேலும் முன்னங்கால், நுரையீரல்கள், இருதயம்,பின்புறம், வால்,மற்றும் குடல்கள் என உடலின் அனைத்து பகுதிகளிலும் குண்டுகள் பாய்ந்து இருந்தது. இதனை பாா்த்த மருத்துவா்கள் வேதனை அடைந்தனா். யானையை மீட்ட மருத்துவர்கள் ஒரு மாத காலமாக சிகிச்சை அளித்து வந்தனர். யானையின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து என்கா சன் யானையை மீண்டும் வனப்பகுதியில் விட்டனர்,

ஆனால் காட்டிற்குள் விட்ட சில தினங்களிலேயே யானைக்கு மீண்டும் ஒரு துயரம் நிகழ்ந்தது. சேறு நிறைந்த குளம் ஒன்றில் மயக்கமடைந்த நிலையில் யானை மீண்டும் விழுந்துகிடப்பதை அறிந்து வனத்துறையினா் மீட்டனா். இரண்டு நாட்களாக சேற்றில் கிடந்ததால் யானையின் உடல் வெப்ப நிலை மிகவும் குறைந்தே இருந்ததது. மருத்துவர்கள் யானையை காப்பாற்ற போராடினர். ஆனால் மருத்துவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியை அடைய யானை உயிரிழந்தது.

தாய்லாந்து ஊடகங்களில் யானை உயிரிழந்த சோகமான பதிவுகளை வெளியிட்டனா். இந்த செய்தி தாய்லாந்து மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. யானைக்கு அஞ்சலி செலுத்த மக்கள் கூடினா்.அதனால் அந்த இடமே சோக வெள்ளத்தில் முழ்கியது போல் தோற்றமளித்தது. பலரும் என்கா சன் யானையின் புகைப்படங்களை பதிவிட்டு வேதனை தெரிவித்து வருகின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!
Tag Clouds

READ MORE ABOUT :