நடிகை பலாத்கார வழக்கு எம்எல்ஏவின் உதவியாளர் நாளை போலீஸ் நிலையத்தில் ஆஜராக உத்தரவு

பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியை மிரட்டியதாகக் கூறப்பட்ட புகாரில் கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏவின் உதவியாளர் நாளை போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று காசர்கோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரளாவைச் சேர்ந்த பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தனி நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாகச் சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்ட நடிகையிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே இந்த தனி நீதிமன்றம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகப் பாதிக்கப்பட்ட நடிகை புகார் கூறியிருந்தார். அரசுத்தரப்பு சார்பிலும் இதே புகார் கூறப்பட்டது.

இதையடுத்து விசாரணை நீதிமன்றத்தை மாற்ற வேண்டும் என்று கூறி பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் அரசுத் தரப்பு சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், வரும் 20ம் தேதி வரை விசாரணை நீதிமன்றத்தின் விசாரணையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே இந்த வழக்கில் முக்கிய சாட்சியான விபின்லால் என்பவரை மிரட்டியதாகக் கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏவான கணேஷ் குமாரின் உதவியாளர் பிரதீப் குமார் மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து பிரதீப் குமார் மீது காசர்கோடு மாவட்டம் பேக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தப் புகார் தொடர்பாக நாளை விசாரணைக்கு வேண்டும் என்று கூறி போலீசார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். தன்னை போலீசார் கைது செய்யக் கூடும் என்ற அச்சம் பிரதீப் குமாருக்கு ஏற்பட்டதால் முன்ஜாமீன் கோரி அவர் காசர்கோடு நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நாளை போலீஸ் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. அதுவரை போலீசார் பிரதீப் குமாரைக் கைது செய்யக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds